Latest review from jayarajan Ongarakudil
மகான் ஆறுமுக அரங்கர் அருளுரைகள்
முருகா என்றால்,
உணவிலே சைவம், உள்ளத்திலே சைவம், சிந்தையில் சைவம், உணர்ச்சியிலே சைவம், செயலிலே சைவம், சொல்லிலே சைவம், பார்வையிலே சைவம் என்றே அனைத்திலும் சைவமாகிய தூயநிலைதனை அறிவதோடு அதைக் கடைப்பிடித்திட தக்க வாய்ப்பையும் பெற்ற அவர்கள் சைவநிலைகளின் நெறியுணர்ந்து அந்தந்த நிலைகளிலே உள்ள அசுத்தமாகிய அசைவத்தினை நீக்கி சைவமாகிய சுத்தநிலையில் தளராது நின்றிட மனஉறுதியும், திடசித்த வைராக்கியத்தையும், அதற்குரிய தக்க சூழ்நிலைகளையும் முருகன் அருளால் பெற்று தூயநிலை நிற்பார்கள் முருகனை பற்றினோரெல்லாம்.
முருகன் அருள் கூடினாலன்றி சைவநெறி நிற்பது எளிதன்று. முருகனே முக்திக்கும் சித்திக்கும் முதல்வனாவான்.